தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து நிற்க முடிவா? - எழுந்த திடீர் சலசலப்பு

x

தமிழகத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்ய செல்வப்பெருந்தகை கட்சி தலைமை கிடையாது என காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

தமிழகத்தில் காங்கிரசால் தனித்து நிற்க முடியுமா என பாஜக தொடர்ந்து சவால் விடுத்து வருகிறது. இந்த சூழலில் காங்கிரஸ் பொதுக்குழுவில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழகத்தில் எத்தனை நாளைக்குதான் கூட்டணியை சார்ந்து இருப்பது என கேள்வியை எழுப்பியதோடு, நாம் நமது சொந்த பலத்தில் நிற்க வேண்டும் என பேசினார். அவரது பேச்சு சலசலப்பை ஏற்படுத்த, தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து காங்கிரஸ் மத்திய தலைமையே முடிவு செய்யும் என காங்கிரஸ் மேலிடம் தெரிவித்தது. கூட்டணி குறித்து முடிவுசெய்ய செல்வப்பெருந்தகை கட்சி தலைமை அல்ல எனவும், தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து முடிவெடுக்க கட்சியில் வேறு தலைவர்கள் உள்ளனர் எனவும் காங்கிரஸ் தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்