``MLA, MP புறக்கணிப்பு''...வெகுண்டெழுந்த காங்கிரஸார்... திடீர் போராட்டத்தால் திருவள்ளூரில் பரபரப்பு

x

திருவள்ளூர் பொன்னேரியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் காமராஜர் துறைமுக நிறுவனத்தால் கட்டப்பட்ட புதிய கட்டட திறப்பு விழா நடைபெற்றது... இதில் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து

காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் தலைமையில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது... முன்னதாக விழாவிற்காக வருகை தந்த காமராஜர் துறைமுக தலைவர் சுனில் பாலிவால் வாகனத்தை போராட்டக்காரர்கள் வழிமறித்தனர்... சுனில் பாலிவால் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக வந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியினர் துறைமுக நிர்வாகத்தை கண்டித்து தொடர்ந்து கண்டனம் முழக்கங்களை எழுப்பியதால் அவரும் மேலாண்மை இயக்குனர் ஐரீன் சிந்தியாவும் நிகழ்ச்சியை பாதியில் முடித்துக் கொண்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்