"கதர் தொழிலுக்கு கை கொடுப்போம்"-முதல்வர் ஸ்டாலின் | Kathar | MKStalin

x

காந்தி ஜெயந்தியை ஒட்டி கதர்த் தொழிலுக்குக் கை கொடுப்போம் என முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்... இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது அகிம்சை ஆயுதமாக காந்தியால் முன்மொழியப்பட்ட கதர், கைத்தறி ஆடைகளைத் தயாரிப்பது, அதையே அணிவது என்பதன் அடிப்படையில், கை இராட்டைகளைக் கொண்டு நூல் நூற்பதிலும், கதர் ரகங்களை நெசவு செய்வதிலும் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்ந்து வருவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். கதர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கதர் நூற்போர் மற்றும் நெய்வோர் அனைவருடைய வாழ்க்கையிலும் உயர்வு ஏற்படுத்தி, கதர்த் தொழிலுக்குக் கை கொடுக்கும் வகையில், தேச நலன் காக்கும் கதர் மற்றும் கிராமப் பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டிற்கு வலிமை சேர்த்திட வேண்டுமென முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்