சென்னையில் மேயர் பிரியா சொன்ன அறிவிப்பு - மேசையை அதிரவிட்ட கவுன்சிலர்கள்

x

சென்னையில், பக்கிங்காம் கால்வாயை ஒட்டியுள்ள 6 இடங்களில் புதிய பூங்காங்கள் அமைக்க 4 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்ய சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. நாவலர் நகர், வாலாஜா சாலை, பாலாண்டியம்மன் கோயில் தெரு, சிங்காரவேலர் பாலம், பக்கிங்காம் கால்வாய் தெரு, மயிலாப்பூர் கெனால் பேங்க் ரோடு ஆகிய இடங்களில் 6 இடங்களில் புதிய பூங்காக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், விரிவான மதிப்பீட்டு அறிக்கையின் கீழ் நான்கு கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய மாநகாட்சி மாமன்ற கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்