அமைச்சர் உதயநிதி Vs மேயர் பிரியா - ஒரு நிமிடம் ஷாக்கான உதயநிதி

x

சென்னை திருவல்லிகேணி நடுக்குப்பம் பகுதியில் புனரமைக்கப்பட்ட மீன் அங்காடி மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள கைப்பந்து மைதானத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அருகில் இருந்த குழுந்தைகள் மையம் மற்றும் ஒருங்கிணைந்த குழுந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கட்டிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் உதயநிதியும், மேயர் பிரியாவும் டேபிள் டென்னிஸ் விளையாடி அசத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்