முரசொலி செல்வம் மறைவு... திமுக தலைவர் வெளியிட்ட முக்கிய அறிக்கை | DMK

x
  • யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்று தெரியாத நிலையில், அண்ணன் முரசொலி செல்வம் எனும் கழகத்தின் கொள்கைச் செல்வத்தை இழந்து விட்டோம் என முதல்வரும், தி.மு.க. தலைவருமான ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். இளைஞரணி தொடங்கி இன்றைய நிலை வரை தனது வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் அண்ணன் முரசொலி செல்வம் இருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். அதிகாரப் பதவிகள் மீது நாட்டம் இல்லாமல், அரசியல் விளம்பரங்களுக்காக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அத்தனை பணிகளையும் பொறுப்புடனும் சிறப்புடனும் நிறைவேற்றியவர் என்றும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்