டெல்லியில் நேரம் பார்த்து அடித்த நாயுடு.. டிரம்ப் கார்டை வெளியே எடுத்து அமித்ஷாவுக்கு அழுத்தம்..?

x

டெல்​லியில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள சந்திரபாபு நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அவரது இல்லத்தில் நேற்றிரவு சந்தித்து பேசினார். மேலும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் அவர் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என அவர் அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போலவரம் நீர்ப்பாசனத் திட்டத்திற்கான நிதி, பின்தங்கிய பகுதிகளுக்கு சிறப்பு உதவி மற்றும் புதிய தலைநகரான அமராவதியின் வளர்ச்சிக்கு ஆதரவு உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மத்திய அமைச்சர்களை அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்