"பாஜகவினர் ஒருவரை கூட ED கைது செய்யாதது ஏன்?" - கொந்தளித்து கேள்வி கேட்ட அமைச்சர்

x

எதிர்க்கட்சிகளை தேடித்தேடி கைது செய்யும் அமலாக்கத்துறை, பாஜகவை சார்ந்த ஒருவரைக் கூட கைது செய்யாதது ஏன் என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், குஜராத்தில் மோடி ஆட்சியில் 750 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்ட அமைச்சர் விபுல் சௌத்ரி, பல கோடி டெண்டர் ஊழல் வழக்கில் ஈடுபட்ட கர்நாடக பாஜக அமைச்சர் நேரு ஓலேகர் உள்ளிட்ட பல்வேறு பாஜக தலைவர்களை அமலாக்கத்துறை கைது செய்யாதது ஏன் என வினவியுள்ளார்.....


Next Story

மேலும் செய்திகள்