பாஜக IT விங் தலைவரிடம் மன்னிப்பு கேட்ட RSS பிரமுகர்

x

சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில், ஆர்எஸ்எஸ் பிரமுகர் சாந்தனு சின்ஹா மன்னிப்பு கோரியுள்ளார். பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு தேசிய தலைவர் அமித் மாளவியா, மேற்குவங்கத்தில் பல்வேறு பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக, மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் சாந்தனு சின்ஹா குற்றம் சாட்டினார். தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்ததாக, நஷ்ட ஈடு கேட்டு அமித் மாளவியா அவதூறு நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் அமித் மாளவியாவிடம், மன்னிப்பு கோருவதாகவும், தனது கருத்துக்களை திரும்ப பெறுவதாகவும் சாந்தனு சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்