"பாஜக ஆட்சியில் 683 பயங்கரவாத‌ தாக்குதல்.."- அதிர்ச்சி லிஸ்ட்

x

பாஜக ஆட்சியில் 683 பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வேதனை தெரிவித்துள்ளார். ஜம்முவில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், பாஜக தலைவர்கள் ஜம்மு காஷ்மீரை தங்கள் அரசியல் சதுரங்கத்தின் பகடை காயாக மாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினார். துணை நிலை ஆளுநர் விருப்ப‌ப்படி காஷ்மீரில் ஆட்சியை நடத்தி வருவதாகவும், கொள்ளையடிப்பதையும் ரிமோட் கன்ட்ரோல் ஆட்சியையும் நிறுவியிருப்பதாகவும் குறிப்பிட்டார். மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டபோது, காஷ்மீர் மக்களுக்கு பலனளிக்கும் என்று பாஜக தெரிவித்த‌தாக கூறிய பிரியங்கா காந்தி, மாநில அந்த‌ஸ்து பறிக்கப்பட்டதால் மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்