பிரதமர் மோடி போட்ட பக்கா பிளான் - அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றசாட்டு

x

சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், எம்.எல்.ஏ.க்கள் சாலைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதன் பிறகு சாலைகளை சீரமைக்கலாம் என்றும் தெரிவித்தார். மோடி, அமித்ஷாவால் ஊழல்வாதிகள் என்று அழைக்கப்பட்டவர்கள் பாஜகவில் இணைக்கப்படுவதாக, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கடிதம் எழுதியதாக கெஜ்ரிவால் தெரிவித்தார். ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் தங்களது இயக்கத்திற்காக ஒட்டுமொத்த வாழ்க்கையை அர்ப்பணித்த நிலையில் தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை நினைத்து தான் பரிதாபப்படுவதாக கடித‌த்தில் குறிப்பிட்டதாக கூறினார். 13 மாநில அரசுகளை கலைக்க பிரதமர் மோடி முயற்சித்து, பத்து மாநில அரசுகளை கவிழ்த்து வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்த கெஜ்ரிவால், இது அரசின் திருட்டு என்று குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்