அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கு.. நாள் குறித்த சிறப்பு நீதிமன்றம் | Arvind Kejriwal | Delhi

x

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிக்கையை, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. நீதிமன்ற காவலிலுள்ள அவருக்கு எதிராகவும், ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகவும், அமலாக்கத் துறை அண்மையில் துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது.

இந்த துணை குற்றப்பத்திரிக்கையை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா இன்று விசாரணைக்கு ஏற்றதுடன், அரவிந்த் கெஜ்ரிவாலை வரும்12-ஆம் தேதி ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்