கை நீட்டி பேசிய அனுராக் தாக்கூர்... கோவத்தில் கொந்தளித்த தயாநிதி மாறன்

x

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தை பா.ஜ.க சார்பில் தொடங்கி வைத்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இத்தனை ஆண்டுகள் பொறுப்பே இல்லாமல் ராகுல் காந்தி பதவியை அனுபவித்து வந்ததாகவும், தற்போது அதிகாரம் இருப்பதால் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தி.மு.கவை சேர்ந்த தலைவர் சனாதன தர்மத்தை மலேரியாவுடன் ஒப்பிட்டு பேசியதாகவும், இதற்காக திமுகவினர் வெட்கப்படுவதோடு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தி.மு.க எம்.பி தயாநிதிமாறன், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர், நீட் தேர்வு பிரச்சனை கூட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது... ஆனால் அதுகுறித்து பேசுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து தி.மு.க. உறுப்பினர்கள் பதிலளிக்க வேண்டுமென அனுராக் தாக்கூர் தெரிவித்தபோது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள், வெட்கக்கேடு என முழக்கங்களை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்