"துணை முதலமைச்சர்.." - லண்டனில் இருந்து கருத்து சொன்ன அண்ணாமலை

x

தமிழ்நாட்டில் வளமையான ஒரு சிலருக்கு மட்டுமே சூரியன் பிரகாசமாக இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், எக்ஸ்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொதுமக்களுக்கு விடியலுக்கான உண்மையான பொருள் இப்போது தெரிந்திருக்கும் என தெரிவித்துள்ளார். தான், தனது குடும்பம் மற்றும் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கான விடியல் இது என்றும் அண்ணாமலை குறிப்பிட்டள்ளார். தமிழ்நாட்டில் வளமையான ஒருசிலருக்கு மட்டுமே சூரியன் பிரகாசமாக உள்ளதாகவும், மற்ற அனைவருக்கும் கடந்த 40 மாதங்களாக இருள் சூழ்ந்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்