#Breaking|| அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட் தீர்ப்பு.. சிக்கல்.. உச்ச நீதிமன்ற கதவை தட்டிய அண்ணாமலை

x

தனக்கு எதிரான வழக்கு தடை கோரி பாஜக தலைவர் அண்ணாமலை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு....

இரு மதத்தவர்களுக்கு இடையே வெறுப்புணர்வை தூண்டியதாக தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை ஒட்டி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை, தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்தவ மிஷனரி தான் முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.

இது இரு மதத்தினர் இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் உள்ளதாக கூறி சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக, அண்ணாமலைக்கு சேலம் கோர்ட்டு சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், சம்மனை ரத்து செய்யக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் அண்ணாமலை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஓராண்டுக்கு முன் அந்த பேச்சு ஒளிபரப்பட்ட போதும், அதனால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அண்ணாமலைக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுத்து, அவரது மனுவை கடந்த 8-ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அண்ணாமலைக்கு எதிரான வழக்கை சேலம் நீதிமன்றம் சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், இரு மதத்தவர்களுக்கு இடையே வெறுப்புணர்வை தூண்டியதாக தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சென்னை உயர்நீதிமன்றம் தனது மனுவை முழுமையாக ஆராயாமல் உத்தரவு பிறப்பித்துள்ளது. சேலம் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக நடைபெறும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்