"சென்னையின் மூணே மூணு எம்பிக்கள் மாநிலத்தையே சின்னாபின்னாமாக்கிட்டாங்க" - அண்ணாமலை பரபரப்பு பேச்சு

x

சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம் பகுதியில், தமிழக பாஜக தலைவர் என் மண் என் மக்கள் யாத்திரை நடைபெற்றது. யாத்திரையின் ஒரு பகுதியாக மகளிர் சங்கமம் என்ற பெயரில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. அதில் பேசிய அண்ணாமலை, பெண்களை மையப்படுத்தியே பிரதமர் மோடி திட்டங்களை தீட்டி வருவதாக கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400 இடங்களை வெல்லுமா இல்லை 450 இடங்களை வெல்லுமா என்பது, தமிழக மக்களின் கைகளில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்தியும், மழை வந்தால் சென்னை வெள்ளத்தில் தத்தளிப்பதாக அண்ணாமலை கூறியதும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்