"தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்" - அன்புமணியை சாடிய அமைச்சர் ரகுபதி

x

தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்" - அன்புமணியை சாடிய அமைச்சர் ரகுபதி

அரசியல் காரணங்களுக்காக தேர்தல் காலங்களில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து பேசி பாமக மக்களை ஏமாற்றி வருவதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்புக்கு பாட்னா உயர்நீதிமன்றம் தடை விதித்தது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறவில்லை எனவும், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை கேட்டுகொண்டார். இடஒதுக்கீடு வழங்குவதில் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என உச்சநீதிமன்றமும், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையமும் கருதுவதால், எந்தவித சிக்கலும் ஏற்படாத வகையில் சட்டம் இயற்ற முயல்வதாக ரகுபதி குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்