"பொய்.. பொய்.. பொய்.. அவங்க DNAலேயே பொய் தான் இருக்கு".. பிரசாரத்தில் கொந்தளித்த அன்புமணி

x

விக்கிரவாண்டி அடுத்த சூரப்பட்டு கிராமத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம். பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து வாக்கு சேகரிப்பு. "இது முக்கியமான தேர்தல், சமூக நீதிக்கான தேர்தல்". "திமுக கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை". "நீட் தேர்வு ரத்து என்றார்கள், ரத்து செய்தார்களா?". "நீட் தேர்வு ரத்து குறித்து, பிரசாரத்திற்கு வந்துள்ள அமைச்சர் உதயநிதியிடம் கேளுங்கள்". இன்னும் சற்றுநேரத்தில் பிரசாரம் ஓய்வடைய உள்ள நிலையில் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பு. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் மாலை 6 மணியுடன் ஓய்கிறது. "மாம்பழத்திற்கு வாக்களித்தால், நல்ல எதிர்காலம் உண்டு". "திமுக அரசிடம் எந்த தொலைநோக்கு திட்டங்களும் இல்லை". "தனது பிரசாரத்தில் பங்கேற்காத வகையில் மக்களை அடைத்து வைக்கின்றனர்". "மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்". "மக்களை அடைத்து வைக்கும் கலாச்சாரத்தை கண்டுபிடித்தவர் செந்தில் பாலாஜி". "பாமக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்".


Next Story

மேலும் செய்திகள்