அன்புமணி ராமதாஸ் போட்ட ட்வீட் | ANBUMANI RAMADOSS | TWEET | PMK

x

காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தும் "நடந்தாய் வாழி காவிரி" திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார். புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கார்சினோஜென், நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் டையாக்சின் உள்ளிட்ட 28 வகையான நச்சுப்பொருட்கள், தொழிற்சாலைகளில் இருந்து காவிரியில் கலக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார். இதனால், காவிரியை தூய்மைப்படுத்த பாமக தொடர்ந்து வலியுறுத்தி, பரப்புரை பயணம் மேற்கொண்டதாக அன்புமணி ராமதாஸ் சுட்டிக் காட்டியுள்ளார். 11 ஆயிரத்து 250 கோடி மதிப்புள்ள தூய்மைப்படுத்தும் திட்டத்தை, மத்திய மாநில நிதி பங்களிப்பு போக, மீதமுள்ள நிதியை கடனாக பெற்று, திட்டத்தை தமிழக‌ அரசு செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்