அன்புமணி ராமதாஸ் போட்ட ட்வீட் | ANBUMANI RAMADOSS | TWEET | PMK

x

தமிழகம் முழுவதும் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி ஊராட்சியில் ஒன்றிய பெருந்தலைவராக இருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த பூங்கோதை சசிகுமார், துணைத் தலைவர் மாரிவண்ணமுத்து என்பவரால் இழைக்கப்படும் சாதிய அவமதிப்புகளை தாங்கிக் கொள்ள முடியாமல் பதவி விலகியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் எவ்வாறு சமூகநீதி வழங்கப் போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்