“அம்பேத்கரே வந்து சொன்னாலும் அரசியல் சாசனத்தை மாற்ற முடியாது“ - உறுதியாக சொன்ன பிரதமர்

x

சட்டமேதை அம்பேத்கரே வந்து சொன்னாலும் அரசியல் சாசனத்தை மாற்ற முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக கூறினார்.

மக்களவைத் தேர்தலையொட்டி சத்தீஸ்கர் மாநிலம், சக்தி பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது,பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை ரத்து செய்து விடுவார்கள் என்றும், இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவார்கள் என்றும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார். இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இதே பொய்யை அவர்கள் பரப்பிக் கொண்டிருப்பார்கள் என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். இனி, சட்டமேதை அம்பேத்கரே மீண்டும் வந்து அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்தால்கூட, அது ஒருபோதும் நடக்காது என்றும் அவர் கூறினார். மோடியின் தலையை தகர்த்து விடுவதாக காங்கிரஸ் கட்சியினர் கூறி வருவதாக குற்றம் சாட்டிய பிரதமர், இந்த நாட்டின் தாய்மார்களும், சகோதரிகளும் பாதுகாப்பு கவசமாக இருக்கும் வரை தனக்கு யாராலும் எந்த தீங்கும் இழைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்