அதிமுகவுக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் - என்ன காரணம்..?

x

ஆந்திர துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், எம்.ஜி.ஆர். மீது உள்ள தனது அன்பு குறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னை மயிலாப்பூரில் படித்தபோது, தமிழ் ஆசிரியர் மூலம் எம்.ஜி.ஆர். குறித்து தனக்கு அறிமுகம் கிடைத்த‌தாக தெரிவித்துள்ளார். அப்போது, திருக்குறள் ஒன்றை குறிப்பிட்டு, அதன் பொருளை எம்ஜிஆரின் குணங்கள் பரதிபலிப்பதாகவும் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். தனக்கு தமிழ் ஆசிரியர் குறிப்பிட்ட திருக்குறள் என்று, கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி என்ற குறளையும், அதற்கான விளக்கத்தையும் பவன் கல்யாண் பதிவிட்டுள்ளார். மேலும், அதிமுகவின் 53ஆம் ஆண்டு தொடக்க விழாவுக்கு வாழ்த்துவதாகவும் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்