அதிமுக மா.செ. காலேஜ்-ல் அதிரடி ரெய்டு... பரபரப்புக்கு நடுவே ஈபிஎஸ் உடன் மாசெ இளங்கோவன் - த்ரிலில் திருச்சி

x

திருச்சி மாவட்டம் முசிறி அருகே, எம்புதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், சேலம் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் இளங்கோவன் நடத்தி வரும் பாலிடெக்னிக் மற்றும் வேளாண் பொறியியல் கல்லூரியில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 10 பேர் அடங்கிய அதிகாரிகள் சோதனை நடத்தும் நிலையில், கல்லூரி வழக்கம்போல் இயங்கி வருகிறது. அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள், கோப்புகள் மற்றும் கணினிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய சோதனை இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேளாண் பொறியியல் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் கூட்ட அரங்கை, கடந்த மாதம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் திறந்து வைத்த நிலையில், கல்லூரியில் வருமான வரி சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்