``சசிகலா, TTV, OPS... '' நேருக்கு நேர் கேட்ட நிர்வாகிகள்... அடுத்த நிமிடமே அடித்து சொன்ன ஈபிஎஸ்...

x

சென்னை ராயபபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அப்போது, கூட்டத்தில் பேசிய தஞ்சை மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர், சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்கலாம் என கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, தற்போது கட்சி சந்திக்கும் பிரச்சினைகளுக்கு காரணமான சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் ஆகியோருக்கு அ.தி.மு.க.வில் எந்த காலத்திலும் இடமில்லை என திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்