பவனிடம் இருந்து சர்ப்ரைஸ் மெசேஜ்... ஈபிஎஸ்-ன் உடனடி ரிப்ளை - தமிழக அரசியலில் ட்விஸ்ட் சம்பவம்

x

அ.தி.மு.க. 53வது தொடக்க நாளுக்கு வாழ்த்து தெரிவித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

பாஜகவுடன், இனி எப்போதும் கூட்டணி கிடையாது என்று நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்ட அதிமுக, பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் விமர்சித்து வருகிறது. அதே போன்று அதிமுகவை, பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், ஆந்திராவில் பாஜக கூட்டணியில் உள்ள ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், எம்ஜிஆரை புகழ்ந்து பேசியுள்ளார். மேலும், அதிமுகவின் 53ஆவது ஆண்டு தொடக்க விழாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலளித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது தலைமையிலான அதிமுகவுக்கு வாழ்த்து கூறிய பவன் கல்யாணுக்கு நன்றி என்று கூறியுள்ளார். பாஜக கூட்டணியில் உள்ள கட்சியின் தலைவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து நட்பு பாராட்டியிருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்