ஆள்மாறாட்டத்தில் 20 கோடி அடித்த அதிமுக நிர்வாகிகள் வழக்கு - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

x

அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகளான அமுதா மற்றும்

மனோகரன் மீதான புகார் குறித்து புதிதாக விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆள்மாறாட்டம் செய்து 20 கோடி ரூபாய் நிலத்தை மோசடி செய்ததாக, சேரன்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவியான அதிமுகவைச் சேர்ந்த அமுதா மற்றும் அவரது கணவரும், மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவருமான மனோகரன் உள்ளிட்டோர் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந் நிலையில், வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி ரோஸ்லின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணையின் போது, இந்த வழக்கில் புதிதாக விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்