கொடநாடு கொலை வழக்கு..! அதிமுக நிர்வாகிக்கு சம்மன் | ADMK

x

கொடநாடு கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு தூபாயில் உள்ள அ.தி.மு.க. மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கொடநாடு பங்களாவில் 2017ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கில், சயானின் கூட்டாளிகளை பிடித்து போலீசார் விசாரித்தபோது, அதிமுக மாநில வர்த்தக அணி தலைவராக உள்ள கூடலூரை சேர்ந்த சஜீவனை, விடுவிக்குமாறு தொலைபேசியில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஏற்கனவே ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிபடை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதனிடையே, வனவிலங்குகளை வேட்டையாட கள்ளத்துப்பாக்கி வாங்கிக் கொடுத்த வழக்கு ஒன்றில் மூன்றாவது குற்றவாளியாக சஜீவன் சேர்க்கப்பட்டதால், கடந்த ஏப்ரல் மாதம் துபாய்க்கு சென்று அவர் தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில் கொடநாடு வழக்கு தொடர்பாக, வரும் 5-ந்தேதி சிபிசிஐடி விசாரணை அலுவலகத்தில் சஜீவன் ஆஜராக வேண்டும் என்று, கோவையில் உள்ள சஜீவனின் மனைவியிடம் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்