அறிவிப்பை வெளியிட்ட ஈபிஎஸ்..! கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன் | ADMK

x

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் போராட்டம் அறிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற ஆணையின்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். முல்லைபெரியாறு பேபி அணையின் எஞ்சிய பணிகளை முடிக்க தேவையான அனுமதி அளிக்க கேரள அரசை வருவதாக வலியுறுத்தி வருவதாக அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழ் மொழி மற்றும் மாநில உரிமைகளுக்காக எப்போதும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர், அண்டை மாநில நதி நீர் பிரச்சினையில் அரசியல் லாபம் கருதி வெற்று அறிக்கைகளையும் போராட்டங்களையும் அறிவிக்கும் அதிமுக, மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்