மலை கிராம மக்களுக்கு அமைச்சர் சொன்ன செய்தி | Aandipatti | Theni | Thanthitv

x

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கடமலை மயிலை ஒன்றியத்தில் வனத்துறை முட்டுக்கட்டையால் முழுமை பெறாமல் உள்ள சாலைகள் குறித்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். தொடர்ந்து, வருசநாடு - வாலிப்பாறை இடையே 25 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாமல் இருக்கும் மலைச்சாலை, தும்மக்குண்டு - சீலமுத்தையாபுரம் மழைச்சாலைகளையும் பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், முறையாக அனுமதி பெற்று இந்த சாலைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என்றார்.

வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான மலை கிராம மக்கள், எந்த சூழ்நிலையிலும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்