முடிவுக்கு வந்த 48 வருட தொடர்பு.. காங்கிரஸிற்கு அடுத்த அடி

x

மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் அசோக் சவான் காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

2008 டிசம்பரில் மகாராஷ்டிர முதலமைச்சராகப் பதவியேற்ற அவர், ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழலை அடுத்து நவம்பர் 2010இல் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அசோக் சவான், கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்து, காங்கிரஸ் கட்சியுடனான அவரது 48 ஆண்டு கால தொடர்பை முறித்துக் கொண்டுள்ளார்.. அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முடிவு குறித்து அசோக் சவான் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. விரைவில் அவர் பாஜகவில் இணையவுள்ளதாகவும் அவருக்கு மாநிலங்களவை பதவி கொடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன...


Next Story

மேலும் செய்திகள்