“இது கனவின் வெளிப்பாடு“ - பிரதமர் மோடி

கால்நடை மருத்துவ கல்லூரி,வேளாண் கல்லூரி உள்ளிட்ட கல்வி வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.
x
பிரதமர் வீடு கட்டும் திட்டம், குடிநீர் குழாய் இணைப்பு போன்றவை ஏழைகளுக்கு அனைத்து வசதிகளையும் வழங்க வேண்டும் என்ற கனவின் வெளிப்பாடு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ரூ.500 கோடி மதிப்பிலான கால்நடை மருத்துவ கல்லூரி,வேளாண் கல்லூரி உள்ளிட்ட கல்வி வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர். தொடர்ந்து அம்ரித் நீர்நிலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றிய அவர், 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகிழக்கு மாநில மக்களின் சிரமங்கள் குறைந்து வளர்ச்சி தொடங்கியிருப்பதாக தெரிவித்தார். அசாம் மக்களின் பிரச்சனைகளை சாமானியனின் கண்ணோட்டத்தில் இருந்து புரிந்துகொண்டிருப்பதாகவும் கூறிய பிரதமர் மோடி, பிரதமர் வீடு கட்டும் திட்டம், ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு போன்றவை அரசின் திட்டங்கள் மட்டுமல்ல எனவும், அவை ஏழைகளுக்கு அனைத்து விதமான வசதிகளையும் வழங்க வேண்டும் என்கிற அரசுடைய கனவின் வெளிப்பாடு எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்