தேசிய பஞ்சாயத்து ராஜ் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை காஷ்மீர் பயணம்

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி, காஷ்மீரில் உள்ள சம்பா மாவட்டத்துக்கு உட்பட்ட பாலி கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
x
தேசிய பஞ்சாயத்து ராஜ் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை காஷ்மீர் பயணம்

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி, காஷ்மீரில் உள்ள சம்பா மாவட்டத்துக்கு உட்பட்ட பாலி கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். தொடர்ந்து, சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டத்திலும் பிரதமர் மோடி சிறப்புரையாற்ற உள்ளார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் அரசுமுறை பயணம் இது என்பது குறிப்பிடத்த‌க்கது. பிரதமரின் வருகையையொட்டி, பாதுகாப்பு படையினர் சாலைகளில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்