2024 பிரதமர் தேர்தலை குறிவைக்கும் காங்.பிகே அனுப்பிய ரிப்போர்ட்.. ஏற்பாரா சோனியா?

தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த தயாரித்து கொடுத்த வியூகங்களின் அறிக்கை சோனியா காந்தியிடம்...
x
2024 பிரதமர் தேர்தலை குறிவைக்கும் காங்.பிகே அனுப்பிய ரிப்போர்ட்.. ஏற்பாரா சோனியா?

தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த தயாரித்து கொடுத்த வியூகங்களின் அறிக்கை சோனியா காந்தியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியை சந்தித்ததால் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் கட்சி தலைமை தீவிரம் காட்டி வருகிறது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கை உள்ளது.

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் 3 நாட்களாக ஆலோசனை நடத்தியதுடன், கட்சியை பலப்படுத்துவது குறித்தும் விவரித்துள்ளார். குறிப்பாக 11 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டிய அவர், கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த திட்டங்களை வகுத்து கொடுத்துள்ளார்.

அதை ஆராய 3 பேர் கொண்ட குழுவை சோனியா காந்தி நியமித்த நிலையில் இறுதி அறிக்கை தயாராகி உள்ளது. சோனியா காந்தியிடம் பிரசாந்த் கிஷோரின் வியூகங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அவரை விரைவில் கட்சிக்குள் அழைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்