முல்லை பெரியாறு மேற்பார்வை குழு... கேரள அரசு முக்கிய அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழு - கூடுதல் உறுப்பினராக அலெக்ஸ் வர்கீஸை நியமனம் செய்து கேரள அரசு அரசாணை வெளியிடு.
x
முல்லை பெரியாறு மேற்பார்வை குழு... கேரள அரசு முக்கிய அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழு - கூடுதல் உறுப்பினராக அலெக்ஸ் வர்கீஸை நியமனம் செய்து கேரள அரசு அரசாணை வெளியிடு.

முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழுவில் ஏற்கனவே 3 பேர் உள்ள நிலையில், கூடுதலாக 3 பேரை சேர்க்கலாம் என உச்சநீதிமன்றம் ஏப்ரல் 8ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. ஏற்கனவே முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழு தலைவராக குல்சன் ராஜ் மற்றும் தமிழக கேரள அரசின் நீர்வளத்துறை செயலாளர் உள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசு தரப்பில் இருந்து ஒரு தொழில்நுட்ப வல்லுனரும், தமிழகம் மற்றும் கேரளா தரப்பில் இருந்து தலா 1 தொழில்நுட்ப வல்லுனரும் கூடுதலாக நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் காவிரி தொழில்நுட்ப குழுத்தலைவர் ஆர்.சுப்பிரமணியன் தமிழக அரசின் தொழில்நுட்ப வல்லுனராக தமிழக அரசு நியமனம் செய்து அரசாணை வெளியிட்டது.

இந்த நிலையில், முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழுவின் கூடுதல் உறுப்பினராக நீர்ப்பாசன துறையின் தலைமைப் பொறியாளரான அலெக்ஸ் வர்கீஸை நியமனம் செய்து கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்