தளபதி, தலைவன் ஆவது எப்போது? - விஜய் அதிரடி பதில்!

நான் தலைவனாக மாற வேண்டுமா என்பதை ரசிகர்களும், சூழ்நிலையும்தான் முடிவு செய்ய வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளார்.
x
நான் தலைவனாக மாற வேண்டுமா என்பதை ரசிகர்களும், சூழ்நிலையும்தான் முடிவு செய்ய வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில், நடிகர் விஜயிடம், பீஸ்ட் திரைப்பட இயக்குநர் நெல்சன் தீலிப்குமார் நேர்காணல் நடத்தினார்.

அப்போது கடவுள் நம்பிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, தான் தேவாலயத்திற்கும் போவேன், பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலுக்கும் போவேன், மசூதியிலும் வழிபாடு நடத்தியுள்ளேன் என விஜய் பதிலளித்தார்.

வழிபாட்டு முறைகளில் தனது பிள்ளைகளிடமும் இதைதான் கூறி வருவதாகவும், அவர் தெரிவித்தார்.

தலைவராக எப்போது அவதரிப்பீர்கள் என கேள்வி எழுப்பப்பட்ட போது, இளைய தளபதியாக இருந்த தன்னை தளபதியாக மாற்றியது ரசிகர்கள்தான் என பதிலளித்த விஜய்,

தான் தலைவனாக மாற வேண்டுமா என்பதை ரசிகர்களும், சூழ்நிலையும்தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தார்

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட விரும்பியதால், அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும்,

தற்போது தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் விஜய் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்