"இலவச ரேஷன் திட்டம்" - யோகி ஆதித்யநாத் அசத்தல் அறிவிப்பு

உத்தரபிரதேசத்தில் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத், இலவச ரேஷன் திட்டத்தை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
x
உத்தரபிரதேசத்தில் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத், இலவச ரேஷன் திட்டத்தை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். நேற்று முதலமைச்சராக பதவி ஏற்ற யோகி ஆதித்யநாத் முதல் அமைச்சரவை கூட்டத்தை இன்று நடத்தினார். அதில், குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை நீட்டிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் இலவச ரேஷன் திட்டத்தை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்ட யோகி ஆதித்யநாத், இதன் மூலம் 15 கோடி பேர் பலனடைவார்கள் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்