"4 மாநிலங்களில் வென்றும் உட்கட்சி பூசலால் ஆட்சி அமைப்பதில் பாஜக திணறல்" - கெஜ்ரிவால்

பாஜக வென்றுள்ள 4 மாநிலங்களில் உட்கட்சி பூசல் காரணமாக ஆட்சி அமைப்பது தாமதமாவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
x
பாஜக வென்றுள்ள 4 மாநிலங்களில் உட்கட்சி பூசல் காரணமாக ஆட்சி அமைப்பது தாமதமாவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி மூலம் பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 4 மாநிலங்களில் வெற்றிப்பெற்றிருந்தாலும், உட்கட்சி பூசலால் ஆட்சியமைக்க முடியவில்லை என்றார். ஆனால், பஞ்சாப்பில் நேரத்தை வீணடிக்காமல் ஆட்சி அமைக்கப்பட்டு அரசாங்க வேலைகள் தொடங்கப்பட்டதாகவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார். 4 மாநிலங்களில் நிலவும் உட்கட்சி பூசலை கையாள்வதில் பாஜக தீவிரம் காட்டி வருவதாகவும் அவர் விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்