"நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்" - திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை

நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.
x
நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களவையில் இன்று பூஜ்ய நேரத்தில் பேசிய திமுக எம் பி திருச்சி சிவா, தேனி மாவட்டத்தில் மத்திய அரசு அமைக்க திட்டமிட்டுள்ள நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தை கைவிட வேண்டும் என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தை சுட்டிக்காட்டினார். மேலும் இதனால் மிகப்பெரும் சேதங்கள் விளையும் என்று குறிப்பிட்ட அவர், சுற்றுச்சூழல் நலன் மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நியூட்ரினோ ஆய்வு மையத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்