"4 மாநில தேர்தல் வெற்றி - மக்கள் மனதில் பாஜக" - வெற்றி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

4 மாநில தேர்தல் வெற்றி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
x
5 மாநில தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து டெல்லி பாஜக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, 4 மாநில தேர்தல் வெற்றி பாஜக அரசு மீதுள்ள மக்களின் நம்பிக்கையை காட்டுவதாக கூறியுள்ளார். பாஜக அரசு ஏழைகளுக்கு ஆதரவான அரசு என்றும், பாஜக மீது ஏழை மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை 4 மாநிலங்களின் தீர்ப்பு காட்டுவதாக கூறியுள்ளார். 4 மாநில தேர்தலில் பாஜகவின் வெற்றி, ஒரு வரலாற்று சாதனை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உ.பியில் 37 ஆண்டுகளுக்கு பின் ஆளுங்கட்சியே மீண்டும் வென்றுள்ளது என்றும், உத்தரபிரதேசத்தில் முதல்முறையாக பாஜக 2-வது தொடர் வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். சாதகமான சூழல் இல்லாத போதிலும், பஞ்சாப்பில் பாஜக கொடியை உயர்த்தி பிடித்த தொண்டர்களை நினைத்து பெருமைப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்