இந்திய மாணவர்களை மீட்கும் விவகாரம் - காங். கட்சியை விமர்சித்த அமைச்சர் பியூஷ் கோயல்

டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
x
டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, எத்தகைய இடர்பாடுகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து அரசும் பிரதமரும் மீட்பார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் இருப்பதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். கடந்த 3 வாரங்களில் உக்ரைனில் சிக்கி தவித்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டதாக குறிப்பிட்டார். உலக நாடுகளின் தலைவர்களுடன் உரையாடிய பிரதமர் மோடியின் ராஜாங்க ரீதியிலான முயற்சிகளால் இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தார். எனினும், காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் மாணவர்களின் மீட்பு நடவடிக்கையை அரசியலாக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், இக்கட்டான சூழலில் மக்களுக்கு ஆதரவாக இல்லாமல், தவறான பிரச்சாரத்தில் எதிர்கட்சி தலைவர்கள் ஈடுபட்டதாகவும் பியூஷ் கோயல் சாடினார்.

Next Story

மேலும் செய்திகள்