"இந்தியா சக்தி மிகுந்த நாடாக மாற வேண்டியது அவசியம்" - பிரதமர் மோடி

சர்வதேச அளவில் இந்தியாவை சக்தி மிகுந்த நாடாக மாற வேண்டியது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
x
சர்வதேச அளவில் இந்தியாவை சக்தி மிகுந்த நாடாக மாற வேண்டியது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் இன்னும் இரு கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மகராஜ்கன்ஜ் - ல் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, சர்வதேச அளவில் மாற்றங்கள் அவ்வபோது நிகழ்ந்து வருவதாகவும் இதற்கு ஏற்றார் போல, இந்தியாவை சக்தி மிகுந்ததாக மாற வேண்டியது அவசியம் என கூறியுள்ளார். உலகமக்கள் தற்போது பல சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும், இதற்கு இந்தியா சக்தி மிகுந்ததாக இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்