அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
x
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மார்ச் 24 ஆம் தேதி இந்தியாவில் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 17 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வர ஒருவாரமே எஞ்சியுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளதே தவிர கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையில், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது. இத்தகைய சூழலில், மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கு தொடர்பாக, இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 



Next Story

மேலும் செய்திகள்