முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி மகன் திருமணம் - சமூக விலகலை கடைபிடிக்கவில்லை என புகார்

கர்நாடக மாநிலம் ராம்நகராவில் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகிலின் திருமணம் நடைபெற்றது.
முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி மகன் திருமணம் - சமூக விலகலை கடைபிடிக்கவில்லை என புகார்
x
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிடதியில் உள்ள பண்ணை வீட்டில் திட்டமிட்டபடி கர்நாடகத்தின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, தமது மகன் நிகிலின் திருமணத்தை நடத்தியுள்ளார். மணமக்கள் உறவினர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற இந்த திருமணத்தின் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. இதனையடுத்து, சமூக விலகல் கடைபிடிக்கப்படாமல் திருமணம் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்