"ஒரே சுடுகாடு ஒரே ஜாதி" என்று சொல்ல முடியுமா?" - மத்திய பா.ஜ.க. அரசுக்கு சுப வீரபாண்டியன் கேள்வி

"சிதம்பரம் கைது அரசியல் உள்நோக்கம் கொண்டது"
ஒரே சுடுகாடு ஒரே ஜாதி என்று சொல்ல முடியுமா? - மத்திய பா.ஜ.க. அரசுக்கு சுப வீரபாண்டியன் கேள்வி
x
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கருத்தரங்கம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் இந்து என் ராம், பீட்டர் அல்போன்ஸ், சுப. வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். பா.ஜ.க. வில் அண்மையில் ஐக்கியமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பா.ஜ.க. அரசு தயங்குவது ஏ​ன்? என பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சிதம்பரம் கைது  முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் அடிப்படையிலானது என இந்து என். ராம் தெரிவித்துள்ளார். இந்த கருத்தரங்கில் பேசிய திராவிட இயக்க தமிழ் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன்,  ஜனநாயகத்தை காக்க குரல் கொடுக்கும் யாரை வேண்டுமானாலும் பா.ஜ.க. அரசு கைது செய்யும் என தெரிவித்தார்.  ஒரே நாடு ஒரே தேசம் என்று சொல்லும், மோடி தலைமையிலான  பா.ஜ.க. அரசு ஒரே சுடுகாடு ஒரே ஜாதி என்று சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினார். 

Next Story

மேலும் செய்திகள்