"நாட்டின் கலாச்சாரத்தை காங்கிரஸ் சீரழித்து வருகிறது" - ராஜ்நாத் சிங்

நாட்டின் கலாச்சாரத்தை ஆங்கிலேயர்களுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சி சீரழித்து வருவதாக ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார்.
நாட்டின் கலாச்சாரத்தை காங்கிரஸ் சீரழித்து வருகிறது - ராஜ்நாத் சிங்
x
மதுரை பாண்டி கோவில் சுற்றுச்சாலை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், மதுரை மக்களவை தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் ராஜ் சத்யனை ஆதரித்து மத்திய அமைச்சர் ஆதரவு திரட்டி பேசினார். நம் நாட்டின் கலாச்சாரம் மிகவும் பழமை வாய்ந்தது என்றும் அதனை ஆங்கிலேயர்களுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சி சீரழித்து வருவதாக ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார். காங்கிரஸை தமிழக மக்கள் விரட்டியடித்தாலும், பின் வாசல் வழியாக நுழைய பார்ப்பதாகவும், காங்கிரஸ் கட்சியால் தி.மு.க.வுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. பின் எதற்கு தி.மு.க. அவர்களுடன் கூட்டணி ஏன் கூட்டணி வைத்துள்ளார்கள் என தெரியவில்லை என்றும் தெரிவித்தார். காங்கிரசுக்கு சரியான தலைமை இல்லை என்றும், அக்கட்சி மூழ்கும் கப்பல் போல உள்ளதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மேலும் மோடி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நலதிட்டங்களையும் ராஜ்நாத் சிங் பட்டியலிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்