மேகதாது விவகாரம் : நாடாளுமன்றத்தில் உரிய அழுத்தம் கொடுக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்

மேகதாது விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் உரிய அழுத்தம் கொடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
மேகதாது விவகாரம் : நாடாளுமன்றத்தில் உரிய அழுத்தம் கொடுக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
x
எம்பிக்கள் கூட்டத்திற்கு பின், அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் முன்வைக்க வேண்டிய கருத்துக்கள் மற்றும் அரசியல் நிலவரம் குறித்தும், புயல் நிவாரணப் பணிகள் குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசித்தனர். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், சம்பத், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கடம்பூர் ராஜூ, அன்பழகன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், மேகதாது விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் உரிய அழுத்தம் கொடுக்கப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்