மெரினா வழக்கில் சாதகமான தீர்ப்பு வராமல் போயிருந்தால் கருணாநிதிக்கு அருகில் என்னை புதைத்திருப்பீர்கள் - ஸ்டாலின் கண்ணீர் பேச்சு.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் ஆசையை நிறைவேற்ற எதையும் இழக்க தயாராக இருந்ததாகவும், அதனால் முதலமைச்சரை நேரில் சந்தித்து மெரினாவில் இடம் ஒதுக்க கோரிக்கை விடுத்ததாகவும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மெரினா வழக்கில் சாதகமான தீர்ப்பு வராமல் போயிருந்தால் கருணாநிதிக்கு அருகில் என்னை புதைத்திருப்பீர்கள் - ஸ்டாலின் கண்ணீர் பேச்சு.
x
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, மெரினாவில் இடம் கிடைத்ததற்கு திமுக வழக்கறிஞர் குழுவுக்குதான் அனைத்துப் பெருமையும் சேரும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்தார். மிகப் பெரிய சோகத்தில் கிடைத்த மகிழ்ச்சி அது, எத்தனையோ சோதனைகள் திமுகவுக்கு வந்ததுண்டு .மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் கோரி முதலமைச்சரின் கையை பிடித்து வேண்டுகோள் விடுத்தேன். மெரினா வழக்கில் சாதகமான தீர்ப்பு வராமல் போயிருந்தால் கருணாநிதிக்கு அருகில் என்னை புதைத்திருப்பீர்கள். கருணாநிதியின் எண்ணம், போராட்டங்கள் வெற்றி பெற்றுள்ளது. மறைந்தாலும் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார் என ஸ்டாலின் உருக்கமாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்