கர்ப்பிணி குதிரையைக் கொடூரமாக தாக்கிய இளைஞர்கள்

x

கேரள மாநிலம் கொல்லத்தில் கர்ப்பிணி குதிரையை இளைஞர்கள் கட்டி வைத்து கடுமையாக தாக்கும் பதற வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன... பள்ளிமுக்கு பகுதியை சேர்ந்த ஷானவாஸ் வளர்த்து வரும் தியா என்ற குதிரை 5 மாத கர்ப்பமாக உள்ள நிலையில்

குதிரையை மேய்ச்சலுக்கு விட்டிருந்த போது குச்சி, கட்டையைக் கொண்டு 3 இளைஞர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர்... இது குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் 3 பேரையும் அடையாளம் கண்டுள்ளனர்... அவர்கள் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கர்ப்பிணி குதிரையை கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன...


Next Story

மேலும் செய்திகள்