இணையத்தில் வைரலான `விஸ்கி ஐஸ்கிரீம்' - களத்தில் இறங்கி அதிரடி காட்டிய அதிகாரிகள்

x

ஹைதராபாத்தில் விஸ்கி ஐஸ்கிரீம் விற்றது தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜூபிலி ஹில்ஸ் குடியிருப்பில், செயல்பட்டு வரும் கடை ஒன்று, விஸ்கி ஐஸ்கிரீம் விற்கப்படும் என சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்துள்ளது. இதுகுறித்து தவகவலறிந்த அதிகாரிகள், சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு கிலோ ஐஸ்கிரீமுக்கு 60 மில்லி என்ற அடிப்படையில் விஸ்கியை கலந்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கடையை சீல் வைத்த அதிகாரிகள், 3 பேரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்