நாட்டையே நடுங்கவிட்ட கோரம்... கொல்கத்தாவில் அதிரடி தடை - பரபரக்கும் மேற்கு வங்கம்

x

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், ஆர்.ஜி. கர் மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில், ஒருவார காலத்திற்கு போராட்டங்கள் நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான போராட்டங்கள் நாளுக்குநாள் வலுவடைந்து வரும் நிலையில், ஆர்.ஜி. கர் மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில், சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் விதமாக, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா சட்டப்பிரிவின்கீழ், போராட்டங்கள் நடத்துவதற்கும், பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்